சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிள்ளார். கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் பதில் அளித்துள்ளார்.