×

அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை

புழல்: அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் அடுத்த அருமந்தை கூட்டுச்சாலையில் பூதூர், ஞாயிறு, அருமந்தை பகுதிகளுக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடைகள் மற்றும் இருக்கைகள், மின்விளக்குகள் இல்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில்  பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து, அருமந்தை கூட்டுச்சாலையில்  பயணிகள் நிழற்குடை, இருக்கைகள், மின்விளக்கு வசதி செய்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Arumanthai ,Compound , A request to set up a bus shelter at Arumanthai Compound
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல்