சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் மனு தாக்கல் செய்த நிலையில் பரிசீலனையில் போது அது ஏற்கப்பட்டது.