×

கோவளவேடு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் முழுவதும் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் உள்ள நிலையில் இதற்கான நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் திறந்து வருகிறது. அதன் அடிப்படையில், வாலாஜாபாத் ஒன்றியம் ஐமஞ்சேரி ஊராட்சி  கோவளவேடு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

இதில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். விழாவில், நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கிராம மக்களிடம் கிராமத்திற்கு என்னென்ன தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரவி உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovalvedu ,Sundar ,MLA , Paddy procurement center at Kovalvedu village: Sundar MLA inaugurated
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...