×

பாப்பாஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்ற சென்னை ஆசாமி கைது

வானூர் : வானூர் தாலுகா பாப்பாஞ்சாவடி பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(52) என்பதும், இவர் சென்னை மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவரை கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்து வழக்குபதிவு செய்தனர். மேலும் இவர் மீது ஆரோவில் போலீசில் 20 கிராம் கஞ்சா வைத்திருந்து பறிமுதல் செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

Tags : Chennai ,Pappanchavadi , Vanur: Sub-Inspector Sivakurunathan for Prohibition of Liquor in Vanur Taluk Pappanchavadi area where North State workers live.
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...