சென்னை: அதிக வரத்துள்ள 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்படுத்தப்படும். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.