மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கபப்ட்டுள்ளது. இனி இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்ப மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.