×

மதுரை மேலூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை

மதுரை: மதுரை, மேலூரில் நேற்று கல்லூரி மாணவன் வாசுதேவன் (19) கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பிரேம்குமார் (25), வீரா (19), தனுஷ் (20), சுதர்சன் (20), சரவணபுகழ் (25) ஆகியோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கம்பாளிப்பட்டியை சேர்ந்த வாசுதேவன் தனது நண்பன் பாலகண்ணனுடன் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

தும்பைப்பட்டி சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறு செய்து வாசுதேவனை பாட்டிலால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த வாசுதேவன் மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய உடலை உடற்கூறாய்வுக்கு போலீசார் மதுரைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கல்லூரி மாணவன் வாசுதேவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Madurai Malore , Madurai, college student killed, arrested
× RELATED மதுரை மேலூர் அருகே வீட்டின் முன்னால்...