×

லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு முயற்சிக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு: டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன்பு திரண்டு போராட்டம்

இந்தியா: லண்டனில் இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு காலிஸ்தான் பிரிவினை வாதிகள் புகுந்து இந்திய கொடியை அவமதிப்பு செய்ய நேற்று முன்தினம் முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீக்கிய சமூகத்தை சேர்ந்த பலர் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

மூவர்ணக்கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்தியா நமது பெருமை என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர் ஐ லவ் இந்தியா என்று அவர்கள் குரல் எழுப்பினர். காலிஸ்தான் வேண்டாம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். டெல்லியில் சீக்கியர்கள் அமைதியுடன் வாழ்ந்துவருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பிரிவினை வாதம் பேசி சீக்கியர்கள் மீது அவபெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.


Tags : Sikhs ,London ,British Embassy ,Delhi , Indian National Flag in London, Insult, Anti-Sikhs, British Embassy, Protest
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...