×

ஆவடியில் நான்கு பேர் குண்டாசில் கைது

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் நில மோசடியில் ஈடுபட்ட பூதாகரன் பகுதியை சேர்ந்த இனியவன்(33), பெரியபாளையம் ஆரணி பகுதியை சேர்ந்த அறிவுநிதி(29) இருவரும் ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நில அபகரிப்பு வழக்கிலும், திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விஷ்வா என்கின்ற இஸ்கேல்(22) பூந்தமல்லி போலீசாரால் வழிப்பறி வழக்கிலும், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(29)  வழிப்பறி வழக்கிலும் நசரத்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய  ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.  ஆவடி காவல் ஆணையரகத்தில் 2023 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 71 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kundazi ,Avadi , Four people arrested in Kundazi in Avadi
× RELATED முதியவரை ஏடிஎம்மில் ஏமாற்றிய தொழிலாளி குண்டாசில் கைது