×

தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: மொழிப்போர் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் 591 பேருக்கு இலவச பஸ் பாஸ்

தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று  அமைக்கப்படும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ.5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். கடல் தாண்டி தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.

இந்தப் பயணங்கள், நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப்பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு, தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும். நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற்கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும். சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின்  வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த பட்ெஜட்டில் ரூ.11 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government ,War ,Chennai , Tamil Nadu Government Budget 2023-24: Memorial to Language War Martyrs in Chennai Free Bus Passes for 591 Senior Tamil Scholars
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்