சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று பிற்பகல், சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி (ம)பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் , எதிர்வரும் பத்து நாட்களில் பதிவுக்கு ஆவணங்கள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினமும் கொடுக்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்கள்.