×

டெல்லி பாஜ மேலிடம் அவசர அழைப்பு; அண்ணாமலை பதவி பறிப்பு?

சென்னை: டெல்லி பாஜ மேலிடம் அவசரமாக அழைத்துள்ளதையடுத்து அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி பறிப்பா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை எப்போதுமே முன் கோபக்காரர். எதையும் நிதானமாக பண்ணுவது இல்லை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அந்த நிலை இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டார் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குற்றச்சாட்டு வந்தாலும் அதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். அப்படியே சூழ்நிலை போய் கொண்டே இருந்தது. இதனால், அவருக்கு எதிராக எல்லா தலைவர்களும் இருந்தனர்.

வழக்கத்தை விட கூட்டத்தை அதிகமாக காட்டியதால் மோடியும், அமித்ஷாவும் நம்பி விட்டார்கள். இந்த கூட்டத்தை பெரிதாக பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால், அவர் மீது என்ன சொன்னாலும் எடுபடவில்லை. பாஜக முக்கிய தலைவர்களான சந்தோஷ், சிடி ரவி ஆகியோரும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தலைவர்கள் விழித்து கொண்டு இருந்தனர். ஆட்டி படைத்து விடுவார் என்று மேலிடம் நம்பியது. பணத்தை செலவழித்து தான் கூட்டத்தை கூட்டினார். ஆனால், கட்சியில் மற்ற இடங்களுக்கு எங்கேயும் கூட்டம் கூடவில்லை. காரணம் பணத்தை வைத்து தான் ஆட்களை திரட்டினார். இது மேலிடத்துக்கு தெரியாமல் இருந்தது.

இந்த கூட்டத்தை தனக்கு வந்த கூட்டம் என்று அண்ணாமலை பேச தொடங்கினார். தான் ஜெயலலிதா, கலைஞர் மாதிரி ஒரு அசைக்க முடியாத தலைவர் என்கிற மாதிரி பேட்டியும் கொடுத்தார். இந்த பேட்டியால் மற்ற கட்சி தலைவர்களும், பிஜேபி தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். யதார்த்தம் தெரியாமல் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் என்று பேச தொடங்கினர். இதற்கிடையில் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலைக்கும், எடப்பாடிக்கும் மோதல் உருவானது. இதில் பாஜகவினரை இழுக்கும் பணியில் எடப்பாடி இறங்கினார். இதனால் அண்ணாமலை கடும் கோபம் அடைந்தார். டெல்லி மேலிடத்தில் தனக்கு ெகட்ட பெயர் ஏற்பட்டு விட்டதே என்று அண்ணாமலை நினைத்தார்.  

இந்த நிலையில் தான் சென்னையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்தார் அண்ணாமலை. 2014ல் மக்களவை தேர்தலில் 3வது அணி போட்டியிட்டது. திமுக, அதிமுக தவிர 3 வது அணி போட்டியிட்டது. விஜயகாந்த் தலை மையில் அந்த 3வது அணி இருந்தது. அந்த அணியில் தேமுதிக 14 இடங்கள், பாமக 8, பாஜக 7, மதிமுக 7, ஏசிசண்முகம், ஈஸ்வரன், பாரிவேந்தர் ஆகியோருக்கு ஒரு சீட், அதுவும் பாஜக சின்னத்தில் போட்டியிட்டது. இதில் 2 தொகுதியில் அந்த அணி வெற்றி பெற்றது. சேலத்தில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். 3வது அணி 18 சதவீதம், வாக்குகளை பெற்றனர். இப்போது அதே போல் 3வது அணியை உருவாக்கலாம் என்று அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதே 18 சதவீதம் ஓட்டு வாங்கினால் போதும். குறிப்பாக 5 சீட் வெற்றி பெற்றால் போதும்.  சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை விட அதிகமாக ஓட்டு வாங்கி விடலாம் என்று ஒரு திட்டத்தை ரெடி பண்ணி டெல்லி மேலிடத்திடம் அண்ணாமலை கொடுத்துள்ளார்.

தனித்து போட்டியிட்டால் 2வது இடத்திற்கு வந்து விடலாம். ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் போது 18 சதவீதம் வாக்குகளை பெற்றோம். இப்போது ஸ்டாலின் மட்டும் தான் பெரிய தலைவராக இருக்கிறார். அவரை தவிர வேறு பெரிய தலைவர் இல்லை. அதனால்  2வது தலைவராக தாம் உருவாகி விடலாம். பாஜகவையும் 2வது பெரிய கட்சியாக கொண்டு வந்து விடலாம் என்று திட்டத்தை ரெடி பண்ணி மேலிடத்திடம் அண்ணாமலை கொடுத்துள்ளார். மேலிட தலைவர்கள் இதுவரையில் பதில் சொல்லவில்லை. இந்த கோபத்தில் தான் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.  மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேச்சு இருந்தது. இதனால், கட்சி  இரண்டாக பிரிந்து நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேசிய தலைமை எடுக்கும் ஆதரவு என்கிற மாதிரி வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

அண்ணாமலை முடிவு சரி என்று சக்ரவர்த்தி, கருநாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி மற்றும் இளைஞர் அணியினர் ஒரு அணியாக பிரிந்துள்ளனர். இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி டுவிட்டர் பதிவில், அண்ணாமலை எண்ணத்தை நிறைவேற்ற பாஜக தொண்டர்கள் போர்ப்படை வீரர்களாக உள்ளனர். அவர் சொன்னதும் அண்ணாமலைக்கு ஆதரவாக சென்னை பெரம்பூர் உள்பட தமிழகத்தில் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டனர். அதில் டயர் நக்கியும் வேண்டாம்( டயரை தொட்டு கும்பிட்ட ஓபிஎஸ்), தரை நக்கியும்(எடப்பாடி ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்ததை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.) வேண்டாம். வா தலைவா வா. தலைமை ஏற்க வா. தமிழகம் காக்க வா என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு கருநாகராஜன் பதில் கொடுத்துள்ளார். ‘இது போன்று செயல்களில் ஈடுபட்டால் தேசிய தலைவர் மீது புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன். இந்த மாதிரி பொது இடங்களில் விவாதிப்பது கட்சிக்கு உகந்தது கிடையாது. கட்சிக்கு என்று நடைமுறை இருக்கிறது.  அமைதியாக இருக்க வேண்டும். குறிக்கோளுக்காக போராடுபவன் தான் தொண்டனாக இருக்க முடியும். அதனால், இப்போதைக்கு அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை செய்யக்கூடாது என்று அமர்பிரசாத் பதில் கொடுத்துள்ளார்.

பிஜேபி இரண்டாக பிரிந்து மோதும் நிலை உருவாகியுள்ளது. இது எல்லாவற்றையும் மத்திய உளவுத்துறையும், ஆர்எஸ்எஸ் பிரமுகரான கேசவ விநாயகம் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நீண்ட அறிக்கை அனுப்பி உள்ளார். இதற்கிடையில் 27ம் தேதி பிரதமர் தமிழகம் வர உள்ளார். அதற்கு முன்னாடி பிரச்னையை சரி செய்ய 26ம் தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். அமித்ஷாவை சந்திக்க நேரம்  கொடுத்துள்ளனர். அன்று அண்ணாமலைக்கு மேலிடம் கடுமையாக எச்சரிக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பதவியை ராஜினாமா செய்யுமாறு எழுதி வாங்குவார்களா? அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? அல்லது கட்சி பதவி பறிக்கப்படுமா? என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பதவி பறிக்கப்பட்டால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலையை வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags : Delhi , Delhi BJP Headquarters, Urgent Call, Annamalai Deprivation of office
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...