சென்னை: மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், காமராஜரை தலைவராக ஏற்று அவருடன் இணைந்து பணியாற்றியவர், தமிழ் இலக்கியங்களில் ஆழமான புலமைமிக்க தமிழ் உணர்வாளர் என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட குமரிஅனந்தன், நாளை (இன்று) 91ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழ்நாடு பனைமர வாரியத்தின் தலைவர் என பல்துறைகளில் தனித்தன்மையோடு தொண்டாற்றிய பெருமை குமரிஅனந்தனுக்கு உண்டு. தமிழ், தமிழர் நலன் காக்க, பத்துமுறை, நடைபயணம் சென்ற தொண்டறச் செம்மல் பழகுவதில் பண்பாடு, சான்றாண்மை நிரம்பிய தலைவராக, நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டும், குமரிஅனந்தன் 100 வயது கடந்து தமிழ் போல் வாழ்க என வாழ்த்துகிறேன்.