சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று அளித்த பேட்டி: பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என கூறியது உள்ளரங்கத்தில் பேசியது. எனவே, அதற்கு பதில் அளிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணிதான்.
எங்களது தலைமையை ஏற்று கொண்டு வரும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சி தலைமை முடிவு செய்யும். பாஜவுடன் சகித்துக்கொண்டு போகவில்லை. அதிமுக என்றும் தனி தன்மையோடு இயங்குகிறது. குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை.