×

மங்களூருவில் இருந்து அயோத்தி செல்கிறது ராமர் சிலை அமைக்க பிரமாண்ட கல்

மங்களூரு: அயோத்தியில் ராமர் சிலை அமைப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து பிரமாண்ட கல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி  ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நேபாள நாட்டில் இருந்தும் கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ராமர் சிலை அமைப்பதற்காக கர்நாடக மாநிலம், மங்களூரு கர்காலா அருகே உள்ள துங்கபத்ரா நதிக்கரையில்  மிகப்பெரிய கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த பிரமாண்ட கல்லுக்கு நேற்று முன்தினம் இரவு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் சிறப்பு பூஜை செய்து, லாரியில் அனுப்பி வைத்தனர். இதனை மின்சார துறை அமைச்சர் சுனில்குமார் டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.


Tags : Mangaluru ,Ayodhya ,Ram , From Mangaluru to Ayodhya, a huge stone is sent to build the Ram statue
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்