×

இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3வது போட்டி: டிக்கெட் வாங்க நள்ளிரவில் இருந்து காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் 3வது ஒரு நாள் போட்டிகான டிக்கெட்களை வாங்க நள்ளிரவில் இருந்து ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாளை விசாகபட்டினத்தில் நடைபெறும் நிலையில் 3வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்றன 22ம் தேதி நடைபெறுகிறது.3வது போட்டிக்கான நேரடி டிக்கெட் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

ஒரு டிக்கெட் குறைந்த பட்சம் ரூ.1200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் டிக்கெட் விநியோகத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் 139 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கூடுதலாக 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் வரும் 22 ம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒரு நல்ல போட்டி நடைபெறவுள்ளது.


Tags : India-Australia match, 3rd match, midnight, fans waiting to buy tickets
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...