×

குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை; யாரையும் குட்டவும் விடமாட்டோம், குனியவும் மாட்டோம்: ஜெயக்குமார் விளாசல்

சென்னை: கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவே ரயில் என்ஜின் போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரயிலில் எந்தெந்த பெட்டிகள் இடம்பெற வேண்டும் என்பதை என்ஜின்தான் முடிவு செய்யும். கட்சி விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை; யாரையும் குட்டவும் விடமாட்டோம், குனியவும் மாட்டோம். எதையும் சகித்துவிட்டு நாங்கள் செல்லவில்லை;எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது என்றும் அவர் கூறினார்.

பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேசுவது பற்றி எந்தக் கவலையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுகவே முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற வேண்டுமா இல்லையா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும். பாஜகவின் செயல்பாடுகளை நாங்கள் சகித்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : Jayakkumar Vlasal , Kutta Kutta, we will not let anyone down, we will not bend, Jayakumar Vlasal
× RELATED பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56...