×

காங்கேயம் அருகே வணிகவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கடைக்காரர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வணிகவரித்துறை அதிகாரிகள்போல் நடித்து கடைக்காரர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வணிக வரித்துறையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தங்கவேல்(62), கார்த்திகேயன்(59) ஆகியோர் கைதாகினர். முத்தூரில் மணிகண்டன் என்பவரின் வாகன உதிரி பாக விற்பனை கடைக்கு வந்த 2 பேரும் தங்களை அதிகாரிகள் என்று கூறியுள்ளனர்.


Tags : Gangeyam , Kangeyam, Commercial Tax Officer, money collection, arrest
× RELATED காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!