மதுரை: விருதுநகர் புலியூரில் முறையாக ஆய்வு செய்யாமல் விதிமீறி அனுமதி தந்த கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து விருதுநகர் ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஐகோர்ட் கிளையில் நீதிராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி உத்தரவிட்டனர்.