சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமனிடம் மனு தந்தார். ரூ.25,000 செலுத்தி பொதுச்செயலாளர் பதவிக்கான விருப்பமனுவை பெற்று பூர்த்தி செய்து வழங்கினார். இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிலையில் தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வாக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.