சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பற்றி அவதூறு பரப்பிய உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சத்தியசீலன் கைது செய்யப்பட்டுள்ளார். தகுதிநீக்க நடவடிக்கையால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சத்தியசீலன், பார் கவுன்சில் தலைவர் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. பார் கவுன்சில் செயலாளர் அளித்த புகாரில் ஐகோர்ட் முன்னாள் வழக்கறிஞர் சத்தியசீலனை போலீசார் கைது செய்துள்ளார்.