×

ராமாபுரத்தில் கஞ்சா விற்ற 3 லாரி டிரைவர்கள் கைது

பூந்தமல்லி: ராமாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக, ராமாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,  போலீசார் இரவு நேரங்களில், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ராமாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக  இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில், ராமாபுரம் பூத்தபேடு பகுதியை சேர்ந்த  லாரி டிரைவர்களான கவுதம் (23), மாரிமுத்து (27), சதீஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Ramapuram , 3 lorry drivers arrested for selling ganja in Ramapuram
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!