×

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு முதல்வர் வீரவணக்கம்

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம் செலுத்தினார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். மேலும், அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister , Chief Minister pays tribute to soldier who died in helicopter crash
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...