மதுரை: கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சின்ன அனுப்பானடி பகுதியிலுள்ள கோவில் நிலத்தில் ஏற்கனவே அரசு தரப்பில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடங்களை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.