×

சிதம்பரத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மருத்துவ கல்லூரி மாணவர் காலை இழந்த பரிதாபம்..!!

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மருத்துவ கல்லூரி மாணவரின் கால் துண்டானது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த தளபதி ராஜன் மகன் பால செல்வகுமார் (25) முதுநிலை பல் மருத்துவம் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயிலில் ஏறியுள்ளார்.

இவர் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக விழுப்புரம் செல்லும் ரயிலில் எறியுள்ளார். ரயில் புறப்பட்டு சிதம்பரம் ரயில் நிலையத்தை விட்டு சிறிது தூரம் சென்ற பிறகே இதை உணர்ந்த பால செல்வகுமார் உடனடியாக பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அப்போது ரயிலின் சக்கரம் ஏறி அவரது கால் துண்டானது. இதையறிந்த பாதுகாப்பு பணியில் இருந்து சிதம்பரம் ரயில்வே போலீசார் அவரை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரது காலை ஒட்ட வைப்பதற்கான சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Chidambaram , Chidambaram, train, get off, tried, medical, student, morning, lost, pity
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்