புதுடெல்லி: ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று கூறிய ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சமூக ஊடக பதிவுகள் அடிப்படையில் சில கேள்விகளை தயாரித்து ராகுல்காந்திக்கு போலீசார் அனுப்பிய நோட்டீசில்,’ பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நகரில் நீங்கள் பேசும் போது ‘‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’’ என்று பேசி இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை அளித்தால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்’ என்று அந்த நோட்டீசில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.