×

தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம்   இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,’ தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமும் 36 மில்லியன் டன் சரக்கு இலக்கை 17 நாட்களுக்கு முன்னதாகவே எட்டி சாதனை படைத்து உள்ளது.  ’ என்று குறிப்பிட்டுஉள்ளார்.

இதற்கு பிரதமர் மோடி பாராட்டு  தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘‘நல்லது! இந்தியாவின் துறைமுகத்துறை வேகமாக வளர்ந்து பொருளாதார முன்னேற்றத்துக்குப் பங்களிக்கிறது” என்று பதிவிட்டு உள்ளார்.

Tags : Modi ,Tuticorin , Prime Minister Modi praises Tuticorin port
× RELATED எம்ஜிஆரின் கனவுகளை பாஜக...