சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு எப்படி வருகிறது, எங்கு பதுக்கப்படுகிறது, வேறு எங்கே கடத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக வேண்டும்.