×

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ஆவணம் இல்லாத ரூ.28 லட்சம் பறிமுதல்

பெங்களூரு:   சிட்டி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரித்தனர். ஆனால் அதில் இருந்தவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.28 லட்சம் ரொக்கம், 319 கிராம் தங்கம், 15 கிலோ வெள்ளி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் தர்மாவரம் பகுதியை சேர்ந்த காஷ்யா சதீஷ் கடம் (26) என தெரிந்தது. ஆனால் அவர், கொண்டு வந்த ரொக்கம் மற்றும் பொருளுக்கு எவ்வித ஆவணமும் இல்லை. இதனால் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.




Tags : Andhra Pradesh , 28 lakh seized without documents smuggled from Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி