×

வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைவிட மக்கள் தீர்ப்பையே நம்புகிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என கூறினார்.

Tags : DTV Dinakaran ,O.O. ,Panneerselvam , If there is an opportunity, I will work with TTV Dhinakaran if time dictates: O. Panneerselvam interview in Madurai
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...