×

அருணாச்சல பிரதேசம் மாநிலம் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் உயிரிழப்பு

மண்டாலா: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த, நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் பலியாகினர். சடலங்களின் சிதிலங்கள் மண்டலாவின் கிழக்கு பங்களாஜாப் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags : Mandala mountain ,Arunachal Pradesh , Indian Army helicopter crashes in Arunachal Pradesh's Mandalay hills: 2 pilots killed
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...