×

தஞ்சை அருகே திருமணமான 2 நாளில் கர்ப்பிணி தூக்கில் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை மணல்மேட்டை சேர்ந்தவர் விஜயமூர்த்தி. இவர் தனது மாமன் அண்ணாதுரையின் மகளான சரண்யாவை(21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். நெருக்கமாக பழகியதால், சரண்யா 5 மாத கர்ப்பிணியானார். இதையறிந்த இருவீட்டாரின் பெற்றோர் கடந்த 13ம் தேதி, அன்பில் மாரியம்மன் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து, சரண்யாவை விஜயமூர்த்தியின் வீட்டில் விட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சரண்யா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது தந்தை அண்ணாதுரை, தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிறப்பு எஸ்ஐ சிவசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சரண்யாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இதுபற்றி ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சையிலிருந்து தடயவியல் நிபுணர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று அதிகாரிகள் விஜயமூர்த்தியின் வீட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஒரு நோட்டில், எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை  என்று சரண்யா எழுதிவைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நோட்டு, ஆர்டிஓவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Thanjavur , Tanjore, pregnant hanging suicide, heartwarming letter caught
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...