நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வயதான தம்பதி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் உதகையில் உள்ள நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மணிக்கல்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு, அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை அபகரிக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.