டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் முடங்கியது.