திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலஸ்தம்பட்டியில் பிரபல சாராய வியாபாரி மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மோகன்தாஸ் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகன்தாஸ் கூட்டாளி ஏழுமலையை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.