×

கோவை திரையரங்கில் அடிதடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 13 ரவுடிகள் கைது

கோவை: கோவை திரையரங்கில் அடிதடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 13 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையில் சமீப காலமாக கட்டப்பஞ்சாயத்து கும்பல், ரவுடி கும்பலுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக இரண்டு கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது. சத்யபாண்டியன் மற்றும் கோகுல் ஆகிய இருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி ரவுடி கும்பல் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

கோவை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஆரஸ்புரம் பகுதியில் உள்ள ரவுடிகளை திட்டமிட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் திரையரங்கம் ஒன்றில் கட்டப்பஞ்சாயத்து நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணையின் அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கும்பல் ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு ஒரே நாளில் 13 ரவுடிகளை கைது செய்தனர்.


Tags : Coimbatore , 13 raiders arrested in case of stomping in Coimbatore
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்