×

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்க செனட் சபை தீர்மானம் மூலம் அங்கீகாரம்..!

வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என, ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. தீர்மானத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான சர்வதேச எல்லையாக மக்மஹன் கோடு அங்கீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், இந்தோ - பசுபிக் பகுதிக்கும் சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள செனேட்டர் பில் கெஹேர்டி, இந்த நேரத்தில், இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பது அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றார்.

மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் இந்த அரிதான தீர்மானம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் இந்தத் தீர்மானம் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை  அமெரிக்க-இந்தியா இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவுகிறது. மற்றும் தென்கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து குவாட் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் மூலம் இந்தியாவுடனான நமது பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

Tags : Arunachal Pradesh ,India ,US Senate , Arunachal Pradesh belongs to India: Recognition by US Senate resolution..!
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...