×

எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக இப்போதைக்கு ஒரு வட்டார கட்சி: சொல்லிட்டாரு டிடிவி

சென்னை:  அமமுகவின் 6வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றினார். மேலும் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி தினகரன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நாம் எத்தனையோ சோதனைகளை சந்தித்து உள்ளோம். அமமுகவில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல. டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள்.   இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமடைந்து வருகிறது. இன்னும் அவர்கள் பலவீனமடைந்த பிறகு, உணர்ந்துதான் திருந்துவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தலைமையில் இருந்தபோது அதிமுக தமிழ்நாடு முழுவதும் பலமாக இருந்தது.  இப்போது பழனிசாமியின் தலைமையால், அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது.  ஓபிஎஸ்சை நேரம் வரும்போது சந்திப்போன்.




Tags : edapadi paranisami , AIADMK now a regional party under Edappadi Palaniswami's leadership: TTV says
× RELATED டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி...