மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலை பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்காக மொழிகள் ஆய்வகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொழி ஆய்வகத்தை பயன்படுத்தி செய்முறை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.