சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளனர். மார்ச் 17 முதல் தேர்வுக்கூட நுழைவுசீட்டை அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். மார்ச் 20 முதல் மார்ச் 24-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு குறித்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தனித்தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தத்கல் உட்பட 17.03.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை Click’ செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION APRIL 2023 - HALL TICKET DOWNLOAD ST GOT! வாசகத்தினை “Cick” செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

