×

காசோலை மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: காசோலை மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். பண மோசடி வழக்கில் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் ஏற்கனவே கைதாகி ஜாமினில் வெளியே உள்ளனர். முதலீடு செய்ய பெற்ற ரூ.18 கோடிக்கு ஈவுத் தொகையும், செலுத்திய பணத்தை திருப்பித் தரவில்லை எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலீடு செய்த பணத்திற்கு உரிய ஈவுத் தொகையோ, கட்டிய பணத்தையோ திருப்பி தராததால் பைரோஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


Tags : Ajar , Helicopter brothers appear in court in check fraud case
× RELATED போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர்