×

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்கியது. இதையொட்டி கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கின. இன்று முதல் வரும் 19ம் தேதி வரை 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மய பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படிபூஜை ஆகியவையும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.இதன்பிறகு மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக வரும் 26ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். 27ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 5ம்தேதி பிரசித்தி பெற்ற ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக நிலக்கல்லில் உடனடி முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.




Tags : Sabarimala , Panguni, Madha Puja, Sabarimala, Walk opening
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு