×

இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது..!!

சேலம்: ஆயுதங்களுடன் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னாவை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் மற்றும் சத்யபாண்டியன் உள்ளிட்ட இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

உத்தரவின் அடிப்படையில் போலீசார் சில ரௌடிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் வீடியோ வெளியிடுவதும் தெரியவந்தது. இந்த சூழ்நிலையில் தான் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடக்கூடிய நபர்கள் குறித்து பட்டியலெடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என தீர்மானித்தனர். அதன் அடிப்படையில் ஒரே நாளில் 10 ரௌடிகள் கைது செய்யப்பட்டார்கள்.

மொத்தமாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தேடப்பட்டு வந்த நபர் தான் தமன்னா, இவர் புகை பிடித்தவாறு பயங்கர ஆயுதங்களுடன் கானா பாடல்பாடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ என்பது இந்த சம்பவம்  நடைபெற்றிருக்க கூடிய சுழலில் வைரலாகி இருந்தது. இந்த வீடியோ தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார் அவரை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் சேலம் அருகே போலீசார் தமன்னாவை கைது செய்தனர்.

அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளிட்ட தமன்னா பொறுத்தவை ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று வெளிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவரை விரைவில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்கான வாய்ப்பு  இருப்பதாகவும் தெரிகிறது. 


Tags : Instagram , Instagram, Pattakathi, posted the video, arrested the teenager
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...