×

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சிறார் திருமணத்தின் காரணமாக, 14 வயது சிறுமி கர்பமானாள். அவளை கர்ப்பமாக்கிய அவளது கணவனான 17 வயது சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஊத்துக்கோட்டை அருகே கெருகம்பாக்கம்  கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுவனுக்கும், இவரது மாமன் மகளான கச்சூர் கிராமத்தில்  வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

தற்போது சிறுமி 6 மாத கர்பமாக உள்ளார். ஆகையால் அந்த சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். 14 வயது சிறுமி 6 மாதம் கர்பமானது குறித்து மருத்துவர்கள், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். வழக்கை விசாரித்த  இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, வழக்கு பதிந்து சிறுமியின் கணவன் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Boy arrested under POCSO Act for impregnating girl
× RELATED வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!