×

திருவள்ளூரில் துணை நடிகையை காதலித்த வாலிபரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் துணை நடிகையின் அக்கா கணவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பம்பை சிந்து நகர் சேக்காடு பகுதியை சேர்ந்த முத்துபிரசாத் (26) சினிமாவில் துனை நடிகராக உள்ளார்.  இவருடன் துணை நடிகையாக இருக்கும் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த ஆர்த்தி (25) என்பவர்  பூந்தமல்லியில் அவருடைய அக்கா மோனி வீட்டில் தங்கி உள்ளார். ஆர்த்திக்கும் ஜெகன் என்பவருக்கும் ஒன்றறை வருடத்திற்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த திருமணத்தில் தனக்கு  விருப்பம் இல்லாத நிலையில் முத்து பிரசாத்தை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் குறித்து ஆர்த்தி அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். அவரது வீட்டார் முத்து பிரசாத்திடம் பேச வேண்டும் என அழைக்க, பயந்து போன முத்துபிரசாத் வராமல் தவிர்த்தார்.  

இந்நிலையில் பொது இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கடந்த 07.03.23 தேதி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரச் சொல்லி உள்ளனர். அங்கு வந்த முத்துபிரசாத்தையும் அவரது நண்பரையும் காரில் ஏற்றி. பூண்டி ஏரி அருகே பெண்ணலூர்பேட்டை காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு முத்து பிரசாத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். மேலும், கைகளில் பெட்ரோல் கேன் மற்றும் கத்தி வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டி தாக்கியுள்ளனர். இதை அடுத்து முத்து பிரசாத்துடன் சென்ற நண்பர் அரவிந்தன் முத்துவின் சகோதரருக்கு அவர்கள் இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேர் செய்தனர்.

சந்தேகம் அடைந்த உறவினர்கள், முத்து பிரசாத்தை தேடி வருவது தெரிந்து முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வழிநெடுகிலும் முதுகில் கட்டையால் பலமாக தாக்கிக் கொண்டே வந்து, ஓரிடத்தில் விட்டு சென்றுள்ளனர். இதை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெண்ணலூர்பேட்டை காவல் துறையினர், முத்துபிரசாத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முத்துபிரசாத்தை தாக்கியவர்கள் மீது மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாணிடம் கொடுத்த புகாரின் பேரில் முதல் கட்டமாக இந்த வழக்கில் டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, குற்றப்பிரிவு போலீசார் ராவ் பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோரைக் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு கடலூரில் பதுங்கியிருந்தஆர்த்தியின் அக்கா கணவர் பிரதாப் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : The husband of the supporting actress's sister was arrested in the case of kidnapping and assaulting the boy who was in love with the supporting actress in Tiruvallur
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!