டெல்லி: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்துக்கு ஜனாதிபதி பதில் அளித்துள்ளார்.