போளூர் : ஜமுனாமரத்தூர் பகுதியில் கலால் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1700 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். திருவண்ணாமலை கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போளூர் கலால் இன்ஸ்பெக்டர் கே.புனிதா தலைமையிலான ஜமுனாமரத்தூர் அடுத்த பட்டாண்கோவிலூர் கிராமம் மாமரத்து ஓடை அருகே நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பேரல்களில் இருந்த 1,700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இடத்தில் சாராயம் காய்ச்சும் கும்பல் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதுபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.