புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதை கண்டித்து மக்கள் மனு அளித்துள்ளனர். வட்டாட்சியர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு தரும்போது கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில அரசியல் கட்சியினர் தேவை இல்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.