×

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாகவிவாதம் நடத்த மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சூழலில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தமிழகத்தில் லட்சக்கணக்கில் பணத்திற் இழந்த 43-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த  அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

நேற்றையதினம் கூட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருந்தார். இருப்பினும் அவை இடையூறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதனால் அதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்றையதினமும் நோட்டீஸ் விடுத்துள்ளார்.


Tags : DMK ,Lok ,Sabha ,Balu , Online Gambling Issue, Lok Sabha, DMK MP DR Balu Notice
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...